Headlines News :

Latest Post

அஜித் படம் குறித்து விளக்கம் அளித்த சுசீந்திரன்

Written By Unknown on Sunday, June 14, 2015 | 8:09 AM

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து தற்போது அஜித் சிவா இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லக்ஷமி மேனன், சூரி, கபீர் கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருக்கிறார் என்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இச்செய்தி குறித்து இயக்குனர் சுசீந்திரன், அஜித் சார் படம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடன் பணிபுரிய விரும்புகிறேன், அவ்வாறு நடைபெற்றால் உங்களுடன் முதலில் பகிர்ந்துகொள்கிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் விமான இறக்கைத் தொழில்நுட்பம்

நடு­வானில் பறக்கும் போது தன்­னைத்­தானே சீர­மைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்­நுட்­பத்தை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.மேற்­படி இறக்கை தொழில்­நுட்­பத்தின் கண்­டு­பி­டிப்பு குறித்து லண்­டனில் இடம்­பெற்ற ரோயல் சபைக் கூட்­டத்தில் பிரிஸ்டல் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னிகள் குழுவால் முன்­வைக்­கப்­பட்­டது.

நடு­வானில் பற­வைகள் விமா­னங்­களில் மோது­வதால், அவற்றின் (விமா­னங்­களின்) இறக்­கைகள் சேத­ம­டைந்து அவை விபத்­துக்­குள்­ளா­வது வழ­மை­யா­க­வுள்­ளது.
இந்­நி­லையில் விஞ்­ஞா­னி­களால் மூன்று வருட கால ஆராய்ச்­சி­யை­ய­டுத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய தொழில்­நுட்­ப­மா­னது, நடு­வானில் பறக்கும் போது விமா­னத்தின் இறக்கை சேத­ம­டைந்தால் சேதம­டைந்த பகு­திக்குள் சுய­மாக காபன் நாரை கசியச் செய்து பின்னர் அதனை வன்­மை­யாக்­கு­கி­றது. இதனால் விமா­னத்தின் இறக்கையின் சேத­ம­டைந்த பகுதி உடைந்து விழு­வது தடுக்­கப்­ப­டு­கி­றது.
இந்த தொழில்­நுட்பம் எதிர்­கா­லத்தில் சுய­மாக சீர­மைக்கக் கூடிய நகப் பூச்­சுகள், பந்தாட்ட மட்டைகள் என்பவற்றின் உருவாக்கத்தை சாத்தியமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓடும் பஸ்ஸில் பாய்ந்த மின்சாரம் : 25 பேர் பரிதாபமாக பலி

ராஜஸ்தானில் பஸ் மீது உயரழுத்த மின்கம்பிப அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 25 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பயணிகளை நிரப்பிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த சமயம் எதிர்பராத விதமாக சாலையின் குறுக்கே சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதில் பயணித்த 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
தீக்காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அனைவரும் திருமண வீட்டைச்சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நானே ராஜா: கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்­கெட்­டுக்கு மட்­டு­மல்ல, டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா என மேற்கிந்­தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறி­யுள்ளார்.


இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அவர் அளித்த பேட்­டியில் கூறி­யுள்­ள­தா­வது,மக்கள், என்னை டி20 கிரிக்­கெட்டின் ராஜா என்று புகழ்­கி­றார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்­கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்­ச­தங்கள் அடித்­துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்­க­ளும்­கூட அடித்­துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்­கெட்­டுக்கும் நானே ராஜா.
டெஸ்ட் போட்டி என்­பது அற்­பு­த­மா­னது. உங்­க­ளு­டைய மன­நி­லையைப் பரி­சோ­திக்கும். டி20 கிரிக்­கெட்டால் பல புதிய ரசி­கர்கள் இந்த விளை­யாட்­டுக்குக் கிடைத்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே டி20 கிரிக்­கெட்­டையும் நாம் தொட­ர­வேண்டும். டி20 பிடிக்­கா­த­வர்கள் டெஸ்ட் போட்­டி­களைப் பார்த்­துக்­கொள்­ளலாம்.
நான் அதிக சர்­வ­தேசப் போட்­டி­களில் விளை­யாட ஆர்­வ­மா­க­வுள்ளேன். சொந்த ஊருக்குத் திரும்­பிய பிறகு பயிற்­சி­யாளர் மற்றும் கிரிக்கெட் சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன்.
எனது எதிர்­கா­லத்தைப் பற்றி விவா­திப்பேன். என்னை அணியில் சேர்க்க ஆர்­வ­மாக உள்­ளார்­களா என்று பார்ப்பேன். ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

Text Widget

Topics :

Labels

Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. rajh - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger