டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா என மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்களும்கூட அடித்துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா.
டெஸ்ட் போட்டி என்பது அற்புதமானது. உங்களுடைய மனநிலையைப் பரிசோதிக்கும். டி20 கிரிக்கெட்டால் பல புதிய ரசிகர்கள் இந்த விளையாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே டி20 கிரிக்கெட்டையும் நாம் தொடரவேண்டும். டி20 பிடிக்காதவர்கள் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துக்கொள்ளலாம்.
நான் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆர்வமாகவுள்ளேன். சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
எனது எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பேன். என்னை அணியில் சேர்க்க ஆர்வமாக உள்ளார்களா என்று பார்ப்பேன். ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.


0 comments:
Post a Comment